இந்தியா, செப்டம்பர் 24 -- சென்னை:காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை பௌலின் தீபாவின் ஐபோனை போலீஸார் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

பௌலின் தீபா தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த இயக்குநர் சிராஜிதீனின் நண்பர் பிரபாகரனை பிடித்து விசாரித்த போலீஸார் அவரிடமிருந்த தீபாவின் ஐபோநனஐ கைப்பற்றியுள்ளனர்.

தீபா பயன்படுத்திய மூன்று செல்போன்களையும் கைப்பற்றியுள்ள போலீஸார் அதிலுள்ள விவரங்களை டவுண்லோடு செய்துள்ளனர். ஐபோனில் ஏதாவது விவரங்கள் டெலீட் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....