இந்தியா, மே 2 -- காலையில் பருகும் டீ என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அந்த நாளை துவங்குவதற்கான இதமான ஒன்றாகும். அதில் பலருக்கும் பல தேர்வுகள் இருக்கும். கிராம்பு தேநீரின் நன்மைகளைப் பாருங்கள். ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவேண்டும். அதில் 4 கிராம்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அனைத்து தண்ணீரும் பிரவுன் வண்ணத்திற்கு மாறி, நல்ல மணம் வரும்போது அடுப்பை அணைத்துவிடவேண்டும். அதை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் கிராம்பு தேநீர் தயார்.

கிராம்பில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸ்டன்ட்கள் நிறைய உள்ளது. ஃப்ரீ ராடிக்கல்ஸ் எனப்படும் ஆபத்தான மாலிக்யூல்கள் உடலில் ஏற்படுத்தும் சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்கள் உடலில் இயற்கை எதிர்ப்புத்தன்மை, உங்கள் உடலின் செல்களை எதிர்க்கவும், நாள்...