இந்தியா, நவம்பர் 27 -- உத்தரபிரதேசம் : கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விவான் என்ற மாணவன் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி 2-ஆம் வாய்பாட்டை மாணவன் விவானை ஆசிரியர் சொல்ல சொல்லியுள்ளார். ஆனால் விவான் மனப்பாடமாக ஒப்பிக்காததால் ஆசிரியர் அனுஜ் பாண்டே ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாணவனை காயப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவர் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று பள்ளியின் முன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்...