இந்தியா, பிப்ரவரி 8 -- நவகிரகங்களில் சூரிய பகவான் தலைவனாக திகழ்ந்து வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினார். அப்போது தை மாதம் பிறந்தது அந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

சனி மற்றும் சூரியனின் சேர்க்கை 1...