இந்தியா, நவம்பர் 29 -- சென்னை - கோவை இடையிலான பகல் நேர ரயில்களும், சென்னை - சேலம் இடையிலான இரவு நேரம் ரயிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

சென்னை எழும்பூர் - சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும...