இந்தியா, டிசம்பர் 8 -- நவகிரகங்களை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிடம் கூறுகிறது. நவகிரகங்களின் செயல்பாடுகள் பொறுத்தே மனிதனின் செயல்பாடுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களில் நீதிமானாக விளங்குபவர் சனி பகவான். அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரக்கூடியவர்.

சனிபகவான் சரியான இடத்தில் அமர்ந்து விட்டால் தொழில், வேலை ஆகியவற்றில் ஆகச் சிறந்த பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் கோல்சார நிலையின்படி சனி பகவான் சாதகமற்ற நிலையில் அமர்ந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். இது போன்ற சனி தோஷங்களிலிருந்து நலம் பெற சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்கள் குறித்து இங்கே காண்போம்.

பரிகாரங்கள்

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் விளக்கெண்ணெய், நெய் மற்றும் நல்லெ...