இந்தியா, செப்டம்பர் 24 -- தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள் கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த...