இந்தியா, மார்ச் 26 -- Karuppasamy Pandian : திருநெல்வேலி மாவட்டத்தின் அதிமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை தூகக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 76.

அதிமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருப்பசாமி பாண்டியன் கடந்த 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தார். கடந்த 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மேலும் படிக்க | எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட 'தமிழ்' பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?

கருப்பசாமி பாண்டியன் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்களில் வலம் வந்தார். அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். திருநெல்வேலி மா...