இந்தியா, நவம்பர் 29 -- திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40). இவருக்கும் குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்த தேவி(32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து ராஜசேகருக்கு ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடமதுரை மகளிர் போலீசில் தேவி புகார் செய்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் ராஜசேகர் - தேவி ஆகியோர் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்னர் இவர்களுக்கு இடையே மீண்டும் ...