இந்தியா, பிப்ரவரி 1 -- இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

பீகார் மாநிலத்தில் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நெசவுக் கலைஞர் துலாரி தேவி பரிசளித்த மதுபானி ரக சேலையை பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார்.

2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலையை அறிக்கையை அவர் வாசிக்கையில் பீகார் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவோம். இது விவசாயிகளுக்கு மேம்பட்ட வருமானம், திறன் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும...