இந்தியா, நவம்பர் 23 -- மதுரை: மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட அனுப்பானடி பகலவன் நகர் பூக்கார தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு கட்டியுள்ளனர்.

வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வீட்டுக்குத் தேவையான பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

அப்போது அந்த வீட்டுக்குச் சென்ற 42ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டதோடு, நான்தான் கவுன்சிலர் என்று கூறி பிரதமர் ஸ்கீம்ல வீடு கட்டும் போது என்னிடம் கேட்காம எப்படி கட்டுன என

மிரட்டியதோடு, வாயை உடைப்பேன், அடிப்பேன் எனவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 41வது வார்டு பெண்கவுன்சிலரான செல்விய...