இந்தியா, அக்டோபர் 23 -- மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் அல்லது கேங்மேன் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் டீ புதுப்பாளையம் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளர் மற்றும் கேங்மேன் பணிகளில் சேர ஒரு நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் என்ன தங்கமயில் என்பவர் உள்பட 58 பேர்களிடம் பணம் வாங்கியுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளிடம் தனக்கு நல்ல பழக்கம் இருப்பதாக ஆசிவார்த்தை கூறி மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். யாருக்கும் வேலை வாங்கித் தராத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆசிரியர் தவணை முறையில் செலுத்தியுள...