இந்தியா, ஜனவரி 28 -- Anirudh Ravichandar: பல ஆண்டுகளாக, ஏ.ஆர். ரஹ்மான் நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவரது ஆல்பங்கள் அடிக்கடி சார்ட்பஸ்டர்களாக இருந்து வருகின்றன, இதனால் அவர் ஒரு படத்திற்கு கோடிகளைக் கட்டணமாக வசூலிக்க முடிகிறது.

இருப்பினும், 2023 இல், ஒரு இளம் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஒரே படத்திற்கு ஒன்பது இலக்கங்களை வசூலித்து, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக மாறி ஏ.ஆர். ரஹ்மானை மிகவும் பின்னுக்கு தள்ளினார். மேலும் இவை அனைத்தையும் 33 வயதில் செய்தது தான் இங்கே விஷயமே.

தன்னுடைய முதல் படத்திலே தான் இசையமைத்த ஒரு பாடலால் உலகம் முழுக்க பிரபலமானவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். ஒய் திஸ் கொலவெறி பாடல் தான் முதன்முதலில் பல யூடியூப் சாதனைகளை செய்து கோலிவுட் பாடலை உலகறியச் ச...