இந்தியா, அக்டோபர் 26 -- கடந்த 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி பதிவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதிவிக்காக கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி மல்லிகார்ஜுன கார்கே பெற்றார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் கார்கேயிடம், கட்சியின் தேர்தல் பிரிவு தலைவரான மதுசூதனன் மிஸ்திரி வழங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட மூத்த தலைவர்கள் முன்னிலையில...