இந்தியா, ஏப்ரல் 3 -- Actress Raveena Daha: நடிகை ரவீனா தாஹாவிற்கு சீரியல் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டதாக சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை ரவீனா தாஹா, அந்தப் பிரச்சனை முடிந்துவிட்டது. பேச்சுவார்த்தை எல்லாம் சுமூகமாக நடந்துவிட்டது என்றார். மேலும் மற்ற விஷயங்கள் அனைத்தும் என் பெர்சனல் விஷயங்கள் எனக் கூறி புது விவாதத்தை தொடங்கி உள்ளார்.

மேலும் படிக்க| மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. காத்திருக்கும் குணசேகரன் தம்பிகள்.. எதிர்நீச்சல் சீரியல்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் ரவீனா தாஹா விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் நடிப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டார். இதற்கான ப்ரோமோவும் வெளியான நிலையில், அவர் ...