இந்தியா, ஜூன் 9 -- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, 'மறக்குமா நெஞ்சம்' எனும் பெயரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. பின், இந்த நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டடது. இதைத் தொடர்ந்து 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அதே ஆண்டில் செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.

மேலும் படிக்க| என்னது ஜன நாயகன் பட டீசர் ரிலீஸா? இண்டர்நெட்டில் அதிரி புதிரி செய்யும் விஜய் ரசிகர்கள்.. உண்மை என்ன?

அந்த சமயத்தில், நிகழ்ச்சி நடந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய...