ஊட்டி,நீலகிரி,சென்னை,சேலம், மே 14 -- ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டிக்கு எதிர்வினையாற்றியுள்ளார், எதிர் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய எக்ஸ் தளத்தில் இபிஎஸ் பதிவிட்டுள்ள பதில் இதோ:

''இன்று முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் ஸ்டாலின்?

மேலும் படிக்க | சந்தானம் படத்தின் கோவிந்தா சர்ச்சை பாடலை நீக்குக.. ஜனசேனா கட்சியினர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு

இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப...