இந்தியா, மே 13 -- கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பின்னர் 9 பேரும் குற்றவாளிகள் எனவும், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை பல அரசியல் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்! முழு விவரம் !

அந்தப் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ...