இந்தியா, ஏப்ரல் 8 -- நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காத திமுக பற்றியும்; அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாடியிருக்கிறார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் திரு. காந்திசெல்வன் அவர்கள் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்த போது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை செய்தது.

2011 முதல் 2016 வரை தமிழ் நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள்.

உச்ச நீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், நீட் தேர்வின் மூலம்தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைப...