சேலம்,ஓமலூர்,சென்னை, மே 8 -- சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியை கடுமையாக விமர்சிததார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்து வரும் கட்சி அதிமுக. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது . எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு நாடு நாசமாகிவிட்டது, ஆனால் அமைச்சர் ரகுபதி ஏதேதோ பேசுகிறார்.

மேலும் படிக்க | இது தான் சட்டம் ஒழுங்கா? ஈரோடு இரட்டைக் கொலைக்கு திமுக அரசை விளாசும் எடப்பாடி! குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு கேள்வி!

இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு பெண்மணி காவல் நிலையத்தில் இரண்டு சக்கர வ...