இந்தியா, மே 6 -- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிவகிரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது, கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

அண்ணாமலை தனது செய்தியாளர்கள் சந்திப்பில், "கொங்கு பகுதியில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். 4 கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். எத்தனை காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும்?" என்று கேள்வி எழுப்ப...