இந்தியா, மே 15 -- சோசியல் மீடியா பிரபலமும், நடிகருமான ஜி.பி. முத்து, தன் வீட்டுக்கு வரும் பாதையை அடைத்ததுடன், தன்னை முடித்துக்கட்ட சிலர் நினைப்பதாகக் கூறி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து, மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்ட நிலையில், வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் எட்டப்பட்டது.

மேலும் படிக்க| ஹிட் ட்ராக்கில் பாசில் ஜோசப்.. ட்விஸ்ட் அண்டு டர்ன்ஸிலும் சிரிப்பலை.. எப்படி இருக்கிறது மரணமாஸ் படம்?

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வசிப்பவர் சோசியல் மீடியா பிரமுகரும் நடிகருமான ஜி. பி. முத்து. இவர் தன் வருமானத்தில் சேமித்த பணத்தில் இந்த ஊரில் புது வீடு வாங்கியதாகவும் தன் வீட்டிற்கு வரும் பாதையை அடைத்ததாகவும் சிலர் என்னை திட்டமிட்டு கொல்ல சதி செய்வதாகவும் கூறி கலெக்டர் ஆபிசில் மனு அளித்தார்.

இதையடுத்து,...