இந்தியா, மே 23 -- நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிடக் கூடாது என்றும் இதுவரை வெளியிட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜி.ஆர். ஸ்வாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களது விவகாரம் குறித்து செய்திகளை வெளியிட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க ரவி மோகன் தரப்பு கோரிக்கை விடுத்தது.

பின் வழக்கை விசாரித்த நீதிபதி, தங்களுக்கிடையேயான பிரச்னை குறித்து ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என பரஸ்பர ஒப்புதல் தர வேண்டும் என்றார். இதற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்தது....