இந்தியா, ஏப்ரல் 27 -- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தன் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க| தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..

அப்போது பேசிய முதலமைச்சர், " இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வ...