இந்தியா, ஜூன் 2 -- இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன் 83வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் ரசிகர்களின் வாழ்த்து செய்திகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சில மகிழ்ச்சியான அறிவிப்பையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க| ஹாப்பி 83..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. மீடியாவைச் சேர்ந்த அன்பர்களே.. தமிழ்நாட்டில் எங்கெங்கும் நிறைந்திருக்கக் கூடிய எனது அன்பர்களே.. என் மீது மரியாதையும், பாசமும் பக்தியும் வைத்திருக்கக்கூடிய கோடனகோடி ரசிகர்களே நீங்கள் சொல்லுகின்ற பிறந்தநாள் வாழ்த்துகளை நான் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன்.

உங்களுக்கு நன்றி எப்படி சொல்வது எ...