லாகூர்,பலூச்,பலுசிஸ்தான்,டெல்லி, மார்ச் 13 -- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2025 மார்ச் 11 அன்று தொடங்கிய ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் சம்பவம் முழு பிராந்தியத்தையும் உலுக்கியுள்ளது. பலூச் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது, அது ரயிலைக் கடத்தி பல பாகிஸ்தானிய வீரர்களைக் கொன்றதாகக் கூறியது. அதே நேரத்தில் பாக்கிஸ்தானிய இராணுவம், தான் கிட்டத்தட்ட 30 பலூச் போராளிகளைக் கொன்றதாகக் கூறுகிறது. ஆனால், பாகிஸ்தான் தனது வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை வெளியிடவில்லை. அதனால்தான் பாகிஸ்தான் ராணுவம் பொய் சொல்வதாக பி.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், ரயிலில் இருந்து தப்பியவர்கள் பல பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | CBI Case : பே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.