இந்தியா, மே 19 -- மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நீலகிரியில் அமைய இருக்கும் பசுமை ஆற்றல் திட்டங்கள் (Pumped Storage Hydro Power Projects), நீலகிரியின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், சூழல் பாதுகாப்புக்கும் (Eco-system) பெருங்கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புகழேந்தி மற்றும் மோகன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

சுத்தமான ஆற்றல் அல்லது பசுமை ஆற்றல் என்ற பெயரில் நீலகிரியில் துவங்க இருக்கும் Pumped Storage நீர்மின் திட்டங்கள் உண்மையில் நீலகிரியின் பல்லுயிர் பெருக்கத்துக்கும், சூழல் பாதுகாப்புக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கும் அபாயம் நிறைய உள்ளது.

மேல்பவானி அணை, அவலாஞ்சி-எமரால்ட் நீர்த்தேக்கம் மூலம்,1,000 மெகாவாட் மின் உற்பத்தியை, Pumped Storage நீர்மின்திட்டங்கள் அமைக்க, மத்திய அரசின் வனத்துறை சார்ந்...