இந்தியா, மே 15 -- இதுகுறித்து, சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 40,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட 28 லட்சம் தென்னை மரங்கள், கேரளாவிலிருந்து பரவியிருக்கும், வேர்களை பாதிக்கும் பைட்டோபிளாஸ்மா பாக்டீரியா கிருமி தாக்கத்தால், அடுத்த 2 ஆண்டுகளில், நோயிலிருந்து காக்க, வெட்டப்படும் சூழல் உள்ளதால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

2023ல் ஒரு கிலோ தேங்காய் ரூ.18-19 என்று இருந்த நிலை மாறி 2025ல் தற்போது ஒரு கிலோ ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 2 ஆண்டுகளில் 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

நோய் மேலும் பரவாமல் இருக்க தென்னை மரங்களை வெட்ட வேண்டிய அவலம் உள்ளது.

தமிழக அரசோ, பாதிப்புக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1000 மட்டுமே நிவாரணமாக வழங்குகிறது. அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு 35,000 ரூ மட்டுமே நிவாரணமாக வழங்குகிறது....