இந்தியா, மே 30 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த முதல் 3 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசு வழங்குகிறார்.

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில், அன்புமணிக்கு தலைமை பண்பு கிடையாது என ராமதாஸ் சாடல்.

பாமகவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு அன்புமணி சந்திக்கிறார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிகனழை எச்சரிக்கை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடு...