இந்தியா, ஏப்ரல் 27 -- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவை 6வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவர்கள் வகித்து வந்த துறைகளின் பொறுப்புகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் சிவசங்கர் மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதல் பொருப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் செந்தில் பாலாஜி கவனித்து வந...