இந்தியா, மார்ச் 30 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டால் 1% பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறீவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் இதன்படி ரூ.10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் பெண்ணான நிர்மலா சீதாராமனை தமிழரான கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்ததில் தவறு இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே.! நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு கூட்டணி வ...