இந்தியா, ஏப்ரல் 27 -- தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர் குஷ்பும்- சுந்தர்.சியும். இவர்கள் இருவரும் காதலித்து கரம் பிடித்து 25 ஆண்டு திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னும் அவர்களது திரைப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அத்துடன் திருமணத்திற்கு பின் குஷ்பு அரசியலிலும் சினிமா தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் படிக்க| அது தவறான வார்த்தை.. அப்படி சொல்லாதீங்க'.. தென்னிந்திய டப்பிங் படங்கள்தான் ஹிந்திய காப்பாத்துதா? - ஒப்பனாக பேசிய நானி

இந்த நிலையில், குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் அவ்னி தயாரிப்பு நிறுவனத்தின் பேனரின் கீழ் கேங்கர்ஸ் படம் வெளியானது. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் இணைந்திருக்கும் நிலையில் படத்தின் எதிர்பார்ப்பும் ...