இந்தியா, மே 20 -- தமிழ், தெலுங்கு என குரலால் பல அழகிய ஹிட் பாடல்களை மக்களுக்கு திகட்டாமல் கொடுத்தவர் பாடகர் கிரிஷ். இவரது தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க| நாயகனை மறந்திடுங்க.. அந்த மணிரத்னமும் கமலும் இப்போ இல்ல.. தக் லைஃப்பின் கதை சொன்ன கமல்..

ஆனால், இவர் மழைக்கும் கூட இசை கற்றுக் கொள்ள ஒதுங்கியது இல்லை எனக் கூறுகிறார். சரிகமப கூட தெரியாது என்று சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து பேசுகையில், என் வீட்டில் பாடகர்கள் என யாரும் இல்லை. நான் மழைக்கும் இசை கற்றுக் கொள்ள சென்றது இல்லை. நான் காலேஜ் படிக்கும் போது மிமிக்ரி எல்லாம் செய்வேன். எஸ்பிபி மாதிரி பேசி, சிரித்து பார்ப்பேன். அப்போ அ...