இந்தியா, ஜூன் 2 -- தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக மாறி வரும் நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், சினிமாவிற்கு முக்கியத்துவம் தரும் அதே வேளையில், தன் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு அவரது சோசியல் மீடியா பதிவுகளே சாட்சியாக உள்ளன.

மேலும் படிக்க| நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் எது தெரியுமா? ரிலிஸான உடனே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த படங்கள் லிஸ்ட் இதோ..

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 3வது குழந்தையான பவனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தியை கரம் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி 3வது குழந்தை பிறந்தது.

தன் 3வது குழந்தைக்கு பவன் எனப் பெயரிட்ட நடிகர் சிவகார்த...