இந்தியா, மார்ச் 11 -- கோவை : வடவள்ளி அருகே ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தையால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவியது . இந்நிலையில் அட்டகாசம் செய்த சிறுத்தையை வனத்துறையினரால் நேற்று இரவு வலை விரித்து பிடித்தனர்.

கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்ற விவசாயி தனது 5 ஏக்கர் தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலாவின் தோட்டத்தில் இருந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை சிறுத்தை கொன்றது. அப்பகுதிய்ல கிடைத்த சி.சி.டி.வி காட்சிகளில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடுவதும், ஒரு ஆட்டை கவ்வி செல்வதும் பதிவாக இருந்தது. அங்கு இருந்த 4 ஆடுகளை கொன்ற சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆடுகளை உள்ளதா ? என்று தேடியது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது. இது அப்பகுதி மக...