இந்தியா, ஜூன் 11 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனிடம் கவிதா கூட்டுக்குடும்பத்தில் வாழ சம்மதித்து விட்டார். உடனடியாக உனக்கும் அவருக்கும் கல்யாணம் செய்து விடலாம் என்றும் தம்பிகள் அவசரப்படுத்தினர். தனியாக பார்க்கும் பொழுது கவிதா தனிக்குடித்தனம் என்பதை கறாராக கூறியிருந்த நிலையில் எப்படி திடீரென இந்த மாற்றம் நடந்தது என்று சேரனும் குழம்பினான். அதே சிந்தனையில் ஆழ்ந்தும் போனான்.

மறுநாள் காலை சிந்தனை தவறி அவன் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நிலா அங்கு வந்து உங்களுக்கு கவிதாவை பிடிக்கவில்லையா என்று கேட்டாள். அதற்கு சேரன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு இந்த மாற்றத்தில்தான் பெரிய சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.

உண்மையை எப்படி இப்படி மறைத்து கொண்டே இருப்பது என்று நிலா யோசித்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தாள். இந்த...