இந்தியா, பிப்ரவரி 4 -- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்ககூடிய நோயாக ஆங்கிலத்தில் கேன்சர் என்று அழைக்கப்படும் புற்றுநோய் இருந்து வருகிறது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை முறை மேற்கொள்ள தவறினால் உயிரிழப்பு வரை ஏற்படுத்து அபாயம் மிக்க நோயாக புற்றுநோய் இருக்கிறது.

உயிருக்கு ஆபத்தான இந்த அடையாளம் காண்பது, உரிய சிகிச்சையளிப்பது, நோய் பாதிப்பை தடுப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) கூற்றுப்படி, உலகளவில் இறப்புக்கு புற்றுநோய் தான் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், புற்றுநோய...