நரிக்குடி,விருதுநகர்,அருப்புக்கோட்டை,திருச்சுழி,மதுரை, ஏப்ரல் 8 -- 2024-25 பருவ மழை தவறியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய அனைவருக்கும் காப்பீடு வழங்க வேண்டும். கிருதுமால் நதி பாசனத்திற்கு நிரந்தர ஆயக்கட்டு அரசு ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்குடி வேளாண்மைத் துறை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | ஜாமினுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்த செந்தில் பாலாஜி

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இன்று நடந்த ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆறு.கோபாலகிருஷ்ணன் தலை...