இந்தியா, ஏப்ரல் 3 -- இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகனை இழந்துவாடும் இயக்குநர் பாரதிராஜவை நேரில் சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையேயான பழைய நினைவுகளை பகிர்ந்ததுடன் பாரதிராஜா படங்களில் தான் பாடிய பாடல்களை பாடிகாட்டி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா முதல்முறையாக கதாநாயகனாக நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் இருந்து தான் எழுதிய சிறு பொன்மணி அசையும் பாடலை பாடிக்காட்டினார். இந்த படத்தில் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் ஒரு படக்குழு அதில் இயக்குனராக பாரதிராஜாவே நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்த பாடலை எழுதியபோது நடந்ததை பாரதிராஜாவிடம் நினைவூட்டி பேசுகிறார் கங்கை அமரன். அப்போது அவர் பேசுகையில், "இந்த பாட்டை 10 நிமிடத்தில் எழுதினேன். ஞாபகமிருக்கா? பாம்குரோவ் ஹோட்டலில் நீங்க தான், 'இந்த பாட்டை எழுதிட்டு ...