இந்தியா, ஏப்ரல் 1 -- பிரபல நடிகையான ஸ்ரீலேகா,ஆரம்ப காலத்தில் விஜயகாந்துடன் பழகிய அனுபவங்களை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது, 'அகல் விளக்கு திரைப்படத்தின் போதுதான் விஜயகாந்தும் நானும் நெருக்கமானோம். விஜயகாந்த் ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுத்து விடுவார். ஆனால், பாடல் காட்சிகளில் மிகவும் சிரமப்படுவார். இதை அவர் அன்றைய தினம் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதற்கான காரணம், அடுத்த நாள் நடிகை சோபாவுடன் அவருக்கு சூட்டிங் இருந்தது. இந்த நிலையில்தான் நான் சோபாவாக இருந்து, அவரும் நானும் காட்சிகளை ஒத்திகை பார்த்துக் கொள்வோம்.

அது அவருக்கு ஓரளவுக்கு தைரியத்தை கொடுத்தது. அதன் பின்னர் அவரும், நானும் நெருங்கி பழக, என்னுடைய வீட்டிற்கெல்லாம் விஜயகாந்த் வர ஆரம்பித்தார் என்னுடைய கு...