இந்தியா, மே 3 -- பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் வைரமுத்து குறித்து ஆதன் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " கவிஞர் வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞன். அவரது 19ஆவது வயதிலேயே அவரது கவிதை தொகுப்பு வெளிய வந்துவிட்டது. அவரது முதல் கவிதை தொகுப்பு வைகறை மேகங்கள். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அதை பாடத்திட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.

இதைப் பார்த்த தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், பச்சையப்பன் கல்லூரிக்கே சென்று, யார் இந்த வைரமுத்து என்று தேடி இருக்கிறார். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவராக வைரமுத்து இருந்தார். ஆனால் கல்லூரி விதிகளின்படி, ஒரு மாணவர் எழுதிய கவிதை தொகுப்பை, ஒரு பேராசிரியர் பாடமாக நடத்த முடியாது.

அது விதிகளுக்கு புறம்பானது. ஆகையால் அவரது கவிதை தொகுப்பு ...