இந்தியா, பிப்ரவரி 14 -- Vaidhyanatha Swami: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில் கலவைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே சிவபெருமானை பல உயிரினங்கள் வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் என்றும் இருந்து வருகின்றனர். சிவபெருமானுக்கு திரும்பும் திசையெல்லாம் இந்தியாவில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தனக்கென சொந்த உருவமில்லாமல் லிங்க திருமேனியாக அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்த வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானு...