இந்தியா, பிப்ரவரி 4 -- Uthavedeeswarar: தமிழ்நாடு முழுவதும் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நமது இந்தியாவில் மிகப்பெரிய பிரமாண்ட பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். உலகத்தோடு ஒப்பிடுவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கடவுளுக்காக சித்த நிலையை அடையக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் நமது நாட்டில் இருந்து வருகின்றன.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த ...