இந்தியா, பிப்ரவரி 19 -- UPSC : மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 21-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப் பணிகள் தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. சுமார் 979 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, இத்தேர்வுக்கு கடந்த 11-ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என யுபிஎஸ்சி தெரிவித்திருந்து. அதன்பின் கடந்த 18-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
மேலும் படிக்க : 'விஜய் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்துகிறார்' பாஜக மாநில தலைவர் அண்ண...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.