இந்தியா, மார்ச் 31 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களே இன்று எதிலும் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருடைய உதவிகளால் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்...