இந்தியா, ஏப்ரல் 1 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01) சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.51,64...