இந்தியா, ஏப்ரல் 10 -- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக, இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் தற்காலிகமாக தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கடலூர் பிரிவு வருமான வரித்துறை உதவிஆணையர் பாலமுருகன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அங்குசென்று, வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர். குறிப்பாக திருமாவளவன் தங்கி இருக்கும் அறையை நீண்டநேரம் சோதனை செய்தனர். சுமார் 2.30 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் பணமோ ஆவணமோ கைப்பற்றியதாக தகவல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால், முருகானந்தன் விசிகவில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்...