இந்தியா, ஏப்ரல் 20 -- ராஷ்யாவில் கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வந்த விஜய், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாடு திரும்பினார். ரசிகர்கள் படையுடன் திரண்டு வந்து தனது வாக்கை செலுத்திய விஜய் மீது, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வரும்போது புகைப்படம், விடியோ எடுக்க ஊடகத்தினர் போட்டி போட்டனர். அத்துடன் பொதுமக்கள் பலரும் செஃல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

முன்னதாக, வாக்களிக்க வரும் தன்னுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்தார் தளபதி விஜய். இதனால் பொதும...