இந்தியா, பிப்ரவரி 2 -- சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பகுதி சென்னை நகரில் இருந்து தொலைவில் இருப்பதால், பேருந்து நிலையத்தை எளிதில் அடையும் வகையிலும், இணைப்பு ஏற்படுத்தும் வகையிலும் ரயில் நிலையம் புறநகர் ரயில் நிலையம் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் எதிரில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழ்நாடு அரசு சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ. 20 கோடி மதிப்பில் வண்டலூர் ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே நிர...