இந்தியா, பிப்ரவரி 1 -- Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரொமோவில் ஆனந்தின் அப்பா மகேஷூக்கு ஆனந்தியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க, அவளோ அன்பை விரும்பி கிட்டத்தட்ட அவனது வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள்.

இதற்கிடையே சுயம்புவும் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ள துடித்துக்கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆனந்தி என்ன முடிவெடுக்கப்போகிறாள் என்ற ரீதியிலான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் இருவரும் ஆனந்தியின் வீட்டிற்குச் சென்று அவளை பெண் கேட்டனர். ஆனந்தியின் அப்பாவும், அவர்களும் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சுயம்பு உள்ளே நுழைந்து விட்டான்.

ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன் நான் மட்டும்தான்; அப்படி இருக...